மண்முனை வடக்கு பிரதேச செயலக பொங்கல் விழா

(லியோன்)

உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமிய சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில்   உழவர் திருநாளை முன்னிட்டு    பாரம்பரிய  கலாச்சார பொங்கல் விழா  மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர்  வி .தவராஜா தலைமையில்  நடைபெற்றது

பொங்கல் விழா சிறப்பு பூசைகள் பிரதேச செயலக வளாக ஆலயத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூக  அமைப்புக்களினால் பொங்கல் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமிய அபிவிருத்தி சங்கம் , மாதர் அபிவிருத்தி சங்கம் ,சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் , சமுர்த்தி சங்கம் , மாதர் சங்கம் , சிறுவர் கழகம், கிராம மட்ட சிவில் குழுக்கள் ஆகியன இணைந்து   பொங்கல் விழாவை வெகுசிறப்பாக சிறப்பித்தனர் .