சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி வேலூர் சமுர்த்தி சங்கங்களின் வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பும்   நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் கிராம சேவை பிரிவில் இயங்கு சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்களையும் , வேலூர்  கிராம சேவை பிரிவில் சேவையாற்றி ஒய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் டி . சிவலிங்கம் மற்றும் கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றி ஒய்வு பெற்ற அதிபர் திருமதி .டி .அருட் ஜோதி ஆகியோரின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 09.01.2017 திங்கள்கிழமை மாலை கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் நடைபெற்றது . 

கல்லடி வேலூர் சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி .யுனிட்டா தியோபஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி .கே .நிர்மலா . கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே .தங்கதுரை , கல்லடி கிராம சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே..மைதிலி ,கல்லடி வேலூர் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர் .


இதன்போது மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்   சமுர்த்தி சங்கங்களின்  உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு அவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது .     .