(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி வேலூர் சமுர்த்தி சங்கங்களின்
வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பும் நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி
வேலூர் கிராம சேவை பிரிவில் இயங்கு சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்களையும் ,
வேலூர் கிராம சேவை பிரிவில் சேவையாற்றி
ஒய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் டி . சிவலிங்கம் மற்றும் கல்லடி வேலூர் சக்தி
வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றி ஒய்வு பெற்ற அதிபர் திருமதி .டி .அருட் ஜோதி
ஆகியோரின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 09.01.2017 திங்கள்கிழமை
மாலை கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் நடைபெற்றது .
கல்லடி வேலூர் சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி .யுனிட்டா தியோபஸ்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக
சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி .கே .நிர்மலா . கல்லடி
சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே .தங்கதுரை , கல்லடி கிராம சேவை பிரிவு அபிவிருத்தி
உத்தியோகத்தர் கே..மைதிலி ,கல்லடி வேலூர் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர்
கலந்துகொண்டனர் .
இதன்போது மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு அவர்களுக்கான
பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது . .