(லியோன்)
மாவட்ட
நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான குடிநீர் வசதி
முன்னெடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்ட
நீதிமன்றத்திற்கு தமது தேவைகள் நிமித்தம் வருகை தரும் பொதுமக்கள் எதிர் நோக்குகின்ற குடிநீர் பிரச்சினை தொடர்பாக மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலய
உத்தியோகத்தர்களின் கவணத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது .
இதற்கு இணங்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள்
சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி இஸ்லாமிய
வழிகாட்டல் நிலையத்தினால் வழங்கப்பட்ட
குடிநீர் இயந்திரம் இன்று பொதுமக்களின் குடிநீர் பாவனைக்கு திறந்து
வைக்கப்பட்டது .
இந்த குடிநீர்
இயந்திரத்தினை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஜா (17) செவ்வாய்கிழமை
பிற்பகல் திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட
நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்கள் .
மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்