(லியோன்)
மட்டக்களப்பு புனித
மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா மிக
சிறப்பாக நடைபெற்றது .
மட்டக்களப்பு
மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு
மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள்
விழா (27) இன்று அதிபர் வெஸ்லியோ வாஸ்
தலைமையில் நடைபெற்றது .
இந்த கால்கோள் விழா நிகழ்வில்
பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு
கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ சுகுமாரன்
கலந்துகொண்டார் .
ஆரம்ப நிகழ்வாக
அதிதிகள் மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர் இதனை தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் மாணவர்களின் வரவேற்பு கலை
நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் தொடர்ந்து
கல்லூரியின் இரண்டாம் தரம் மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை
மாலை அணிவித்து வரவேற்றக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் ,
கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் பழைய
மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் .