மிக்கேல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா

(லியோன்)

மட்டக்களப்பு  புனித  மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா மிக சிறப்பாக  நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா (27) இன்று அதிபர்  வெஸ்லியோ வாஸ்  தலைமையில்  நடைபெற்றது .

இந்த கால்கோள் விழா நிகழ்வில்   பிரதம விருந்தினராக  மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ சுகுமாரன்  கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர் இதனை தொடர்ந்து  கல்லூரி மண்டபத்தில் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் தொடர்ந்து கல்லூரியின் இரண்டாம் தரம் மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றக்கப்பட்டனர்

இந்நிகழ்வில்  அருட்தந்தையர்கள் , கல்லூரி  அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் , கல்லூரி  ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர் .