கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு (திருத்தம்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 07 மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பல்கலைக்கழக நிர்வாகம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டவிசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி வசதிகளை வழங்ககோரி பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டு போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள் பத்து பேர் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் முறையிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த 10பேருக்கு எதிராக நாளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.