சிவானந்த தேசிய பாடசாலை மாணவன் கணித பிரிவில் மாவட்டத்தில் முதல் இடம்

(லியோன்)

வெளியாகியுள்ள க .பொ.த .உயர்தர பரீட்சையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலையின் மாணவன் கணித பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளார்  .


மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலையின் மாணவன் நாகராஜன் கிருத்திகன் க.பொ.த .உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் தோற்றி மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 52 வது இடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் ,பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை இந்த பாடசாலையில் பல மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் ,


இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாடசாலை அதிபர் கனகரட்ணம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை கல்வி சார சமூகங்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றனர் .