திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கடமைகளை புதிய உதவிப்பணிப்பாளர் பதவியேற்பு.

(சசி துறையூர்) திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கடமைகளை புதிய உதவிப்பணிப்பாளர் பதவியேற்பு.


நேற்று 02.01.2017 திங்கட்கிழமை   திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய உதவிப்பணிப்பாளராக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் சுப நேரத்தில் ஜனாப் MLMN. நைறூஸ் பதவியேற்பு.

இவர் 2013ம்  வருடம் தொடக்கம் கடந்த 2016 வரை மட்டக்களப்பு  மாவட்ட உதவிப்பணிப்பாளராக சிறப்பாக கடமை புரிந்து மட்டக்களப்பு மாவட்டத்தை இளைஞர் அபிவிருத்தியில் முன்னிலைக்கு கொண்டு சென்றவர்.

 அதன் பொருட்டு எதிர்வரும் மார்ச்சு மாதம் திருகோணமலையில் நடைபெறவுள்ள தேசிய வேலைத்திட்டமான 10000 இளைஞர் யுவதிகள் ஒன்றுகூடும் யெவுன் புரய நிகழ்வுகளுக்காக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எரந்த வெலியங்கே அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.