மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட நிகழ்வுகள்

(லியோன்)

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு  இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் 08.01.2016  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன .


இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து  செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு சிரமதான பணிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ் . யோகராஜா . பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .யதிஸ்குமார், பிரதேச செயலக கணக்காளர்  மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகாத்தார்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .