மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி -இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் இளைஞர் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை சந்தியில் உள்ள முடிவெட்டும் கடைக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக சென்று மோதியதன் காரணமாக இருவர் படுகாயமடைந்த நிலையில் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய நபர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் மண்டூர் பாலமுனையை சேர்ந்த கோ.கஜேந்திரன்(19வயது), எஸ்.அதிரதன்(19வயதுஎஸ்.அதிரதன்(19வயது)என்னும் இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேபோன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.