மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல்

திரும்வெம்பாவை பெருவிழாவினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திரும்வெம்பாவையை முன்னிட்டு திருவாசகமுற்றோதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.

திருவாசகத்திற்கு உருகாதோர் யாரும் இல்லையென்று போற்றப்படும் இந்த திருவாசகமுற்றோதலை மட்டக்களப்பு மாவட்ட சைவ திருநெறி மன்றத்தினால் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சைவ திருநெறி மன்றத்தின் தலைவர் சித்தாந்த வித்தகர் எஸ்.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்து தினங்களாக நடைபெற்றுவரும் திருவெம்பாவை உற்சவத்தில் நாளை புதன்கிழமை அதிகாலை தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

நாளை அதிகாலை 4.00மணிக்கு நடராஜருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆருத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.