கல்குடா கல்மடு மீனவர்கள் தமக்கான மீனவர் சங்கக் காணியை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்குடா கல்மடு பிரதேசத்தில் மீனவர்கள் இன்று(26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர் சங்கத்திற்குரிய அரச காணியினுள் தனியார் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் அத்துமீறி குடியேறியுள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அத்துமீறியிருக்கும் இடத்தினை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நீதிமன்றத்தினால் வீட்டினை சேதமாக்கி வெளியேற வைத்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அவற்றை மீறியும் அவர் மேலும் அவ்விடத்திலே குடியிருப்பதாகவும் தமக்கான மீனவர் சங்க காணியினை தமக்கு வழங்குமாறும் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.