ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக
தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்
பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட
பூர்த்தியின் சிறப்பு நிகழ்வுகள் 08.01.2016
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன .
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்
உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப் படுத்தி மாபெரும் இரத்ததான முகாம் 08.01.2016 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்
நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்க தலைமையில் நடைபெற்ற
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ,
கிழக்குமாகாண சமூக மேம்பாட்டு இணைப்பாளருமான
கே .அரசரட்ணம், மட்டக்களப்பு – அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியு . ஜெ . ஜாகொட , மட்டக்களப்பு
மாவட்ட பொலிஸ்
அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன , மத தலைவர்கள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சிவில் பாதுகாப்பு
குழு உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள
உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர் .