மட்டக்களப்பு உன்னிச்சை அணைக்கட்டில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கின்ற உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும்காலத்தில் அதிகளவிலான உள்ளூர் சுற்றுலாவாசிகள் குடும்பங்களாக பிரயாணம் செய்து விடுமுறையினை கழித்து வருகின்றனர்.

குறித்த இடத்திற்கு குழுக்களாக வரும் இளைஞர்கள் போதைவஸ்து பொருட்களை பாவித்துவிட்டு உள்ளாடைகளுடன் நீராடுவதோடு அணைக்கட்டில் உள்ளாடையுடனே சுற்றிதிரிகின்றனர்.

பெண்கள் ஒதுக்குப்புறமான இடத்தில் சென்று குளித்தாலும் அந்த இடத்திற்கும் சென்று செல்பி போட்டோ எடுக்கும் பாணியில் பெண்களை படம் எடுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இன் நிகழ்வால் மனைவி ,சகோதரிகள் ,குழந்தைகளுடன் வரும் சகோதரர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி திரும்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
உன்னிச்சை அணைக்கட்டு பகுதி சுற்றுலா துறை அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்பட்டு இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.