மன்னாரில் களைகட்டும் தேசிய இளைஞர் தைப் பொங்கல் விழா.


(சசி துறையூர்) கொள்கைதிட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் பொங்கல் விழா இம் முறை வடமாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் வெகு சிறப்பாக கொண்டடப்படுகிறது.

  கலை காலச்சார நிகழ்வுகளுடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர்யுவதிகளும் இனமத குல போதமின்றி ஒன்றாக கூடி தமிழர் திருநாளம் உழவுத்தொழிலுக்கு மூலாதாரமான சூரிய பகவானுக்கு  நன்றி கூறும் தைத்திருநாளை பெருவிழாவாக கொண்டாடவுள்ளனர்.

இந் நிகழ்வில் பங்குபற்றுவதற்க்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கில் இருந்து தொடருந்தில் பயணித்து தலைமன்னாரை அடைந்த இளைஞர் யுவதிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஏறந்த வெலியங்கே ஆகியோருக்கு தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து விழா மண்டபம் வரை தமிழர் பாரம்பரியம் மிக்க பெரு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்க்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மாவட்ட சம்மேளன தலைவர் செல்வன் ரி.சசிகுமார் தலைமையில் 30இளைஞர் யுவதிகள்  கடந்த சனிக்கிழமை மாலை பயணித்தமை குறிப்பிடத்தக்கது.