ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள்

(லியோன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பூர்த்தியின் ஆசி வேண்டி  விசேட பூஜை வழிபாடுகள் (08) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

இதற்கு அமைய மட்டக்களப்பு  பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பொறுப்பதிகாரி தீகா வதுற தலைமையில்  ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி ஞாயிற்றுக்கிழமை  மாலை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரையில் சிறப்பு பூஜைவளிபாடுகள் நடைபெற்றது.

இந்த பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரையில் விகாராதிபதி கெட இரி கம தம்ம ஸ்ரீ ஹிமி தலைமையில் சிறப்பு  வழிபாடுகள் நடைபெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய  உத்தியோகத்தர்கள் என பலர்  கலந்துகொண்டனர் .