மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

(லியோன்)

கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற வருகின்றன.


இதற்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள்  நிகழ்வுகள்  11.01.2016 புதன்கிழமை இடம்பெற்றது..

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்தின்   மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு வித்தியாலய அதிபர் கே. ஸ்ரீதரன் தலைமையில்  நடைபெற்றது  .

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும்  பாடசாலையில் நடைபெற்றது


இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய நிருவாக பிரதி கல்விப்பணிப்பாளர்  பி . கோவிந்தராஜா ,ஏறாவூர் பற்று  கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எம் .பாலசுப்பிரமணியம் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .