புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 (லியோன்)

2016 தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு  இன்று   மட்டக்களப்பில் நடைபெற்றது .
 

மட்டக்களப்பு  கல்வி வலயத்தில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  பாடசாலைகளில் 2016 ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவித்து  அவர்களுக்கு  வெற்றி  கிண்ணங்களும் ,பரிசில்களும் வழங்கும்  நிகழ்வு  மட்டக்களப்பு  செலிங்கோ  லைப்  கிளை 04 இன் முகாமையாளர்  எஸ் .வேனுகரன் தலைமையில்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில்  நடைபெற்றது  

மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் மனோராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களையும் பரிசில்களையும்  வழங்கி வைத்தார்   

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை  உத்தியோகத்தர்கள்   பாடசாலை  மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள்  கலந்து சிறப்பித்தனர் .