2014ம் வருடத்தின் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு திரு மா.சசிகுமார் பரிசு வழங்கி கெளரவிப்பு.

(சசி துறையூர்) கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி  நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன் நிலை இளைஞர் சேவை அலுவலராக தெரிவு செய்யப்பட்டார் தற்போதைய முல்லைத்தீவு மாவட்ட, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு மா.சசிகுமார் .

இன்று 17.01.2017 செவ்வாய்க்கிழமை  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அதன் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே அவர்களினால் மடிக் கணணி பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

  இவர் இளைஞர் சேவை அதிகாரியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடமை புரிந்த காலத்திலேயே மாவட்டத்தின் சிறந்த இளைஞர் சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார், மேலும்  2013ம் வருடம் அகில இலங்கை ரீதியிலும் முதலாவது இளைஞர் சேவை அதிகாரியாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.