வவுணதீவில் பொலிஸ் நடமாடும் சேவை

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று வவுணதீவு விளாவட்டவானில் நடைபெற்றது.

விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருணாரட்ன கலந்துகொண்டார்.

பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர்களின் பல்வேறு தேவைகளை கருதிக்கொண்டு இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

இதன்போது பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் பாடசாலை வளாகத்தில் தென்னங்கன்று அதிதிகளினால் நட்டுவைக்கப்பட்டதுடன் 150பேருக்கு தென்னங்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.