கரடியனாறில் சக்திவாய்ந்த கண்ணிவெடி மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் இன்று சக்திவாய்ந்த கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு விவசாயப் பண்ணை வீதி விஸ்தரிப்பில் ஈடுபட்ட போது, புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 15 கிலோகிராம் நிறையுடைய  கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்ணிவெடி, விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் இப்பகுதியில் புதைக்கப்;பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியினை விவசாயிகள் மற்றும் பண்ணைக்கு செல்வோர் பயன்படுத்திவரும் நிலையிலும் இந்த கண்ணிவெடி மீட்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி வெடித்திருந்தால் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய நிலையிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் கரடியனாறு பொலிஸார், குறித்த கன்னிவெடியை செயலிழக்கசெய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.