மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு 22.12.2016
வியாழக்கிழமை மட்டக்களப்பு
பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வும் “ தடைகளே படிகளாக ‘ எனும் மலர் வெளியீட்டு
நிகழ்வும்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில்
நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி .எஸ் .எம் .சார்ள்ஸ்
கலந்துகொண்டார். .
குறித்த
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி
கெமிட் நிகழ்ச்சித்திட்ட இயக்குனர் கே . காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்
இந்தநிகழ்வில் தரிசனம், வாழ்வோசை,ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்களும்
,ஆசிரியர்களும் ,பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள்
,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர் .
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்
இவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது ..