பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு  22.12.2016 வியாழக்கிழமை  மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .



சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால்                      நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வும்   “ தடைகளே படிகளாக ‘        எனும் மலர் வெளியீட்டு நிகழ்வும்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா             தலைமையில்  பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்       திருமதி .பி .எஸ் .எம் .சார்ள்ஸ்   கலந்துகொண்டார்.  .
குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு  செயலக  உதவி பிரதேச  செயலாளர்  எஸ் . யோகராஜா , மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி   கெமிட்  நிகழ்ச்சித்திட்ட இயக்குனர்  கே . காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்தநிகழ்வில்  தரிசனம்வாழ்வோசை,ஓசாணம்மென்கப்புகலிடம் ஆகிய   நிறுவன மாணவர்களும் ,ஆசிரியர்களும்  ,பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர் .
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது ..