மட்டக்களப்பு மக்களே உஷார் சிலர் நபர்கள் சட்ட விரோதமான முறையில் நிதி சேகரிப்பில் தற்போது ஈடுபட்டுவருகின்றனர் (PHOTO & VIDEO

 (லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகுற்பட்ட பகுதியில் சிலர்  நபர்கள் சட்ட விரோதமான முறையில்  சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி வாகனத்தின் இலக்கங்கள் மறைக்கப்பட்ட நிலையில் நிதி சேகரிப்பில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் .


குறித்த நபர்கள்  இன்று 25.12.2016  ஞாயிற்றுக்கிழமை அமிர்தகழி பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நோயுற்ற சிறுவன் தொடர்பிலும் , நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள்  தொடர்பாக தகவல் பெற்றுக்கொள்ள முற்பட்ட வேளையில்  குறித்த வாகனம் மற்றும் நபர்கள் அந்த பகுதியில் இருந்து வேகமாக சென்று மறைந்து விட்டனர்

குறித்த வாகனம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்களின் வாகனம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோ காட்சியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது .  

எனவே குறித்த வாகனம் மற்றும் நபர்கள் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு பொலிசாருக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .