மட்டக்களப்பு நீதிமன்றுக்கு பாரம்பரிய ஆயுதத்துடன் வந்த வேடுவ இனத்தவர்

பாரம்பரியத்தை இழக்கும் காலத்தில் நேற்று மட்டக்களப்பு நீதிமன்றுக்கு தனது பாரம்பரிய உடையுடனும் ஆயுதத்துடனும் வேடுவ இனத்தை சார்ந்தவர் வருகைதந்தார்.

அதை போன்று மட்டக்களப்பிலிருந்து பலர் இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் வாழும் போது தம்மை மட்டக்களப்பு மாவட்டம் என்று சொல்வதற்கு மறைத்து வாழும் ஊரை உரிமை கோரி தமக்கு உரித்தான பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை மறந்த நிலையில் இருப்பவர்கள் மத்தியில் எத்தனை விஞ்ஞான தொழினுட்பம் கூடிய காலத்திலும் தமது பாரம்பரியத்தை குறித்த வேடுவர் இனத்தை சேர்ந்தவர் நிரூபித்துள்ளார்.

அவருக்கு நீதிமன்றுக்குள் அவரின் பாரம்பரிய ஆயுதமான கோடரியுடன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.