(லியோன்))
கிழக்குமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாகாணக் காரியாலயம் 19.12.2016 திங்கள்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் கிழக்குமாகாணத்திற்கான
பிரதேச அபிவிருத்தி வங்கியின்
மாகாணக் காரியாலயம் வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது .
வங்கி திறப்பு விழா நிகழ்வில் வங்கி
பொது முகாமையாளர் டி .எ . ஆரியபால , பிராந்திய பொது முகாமையாளர் ஜெக்சன் விஜேசேகர , மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி பி .எஸ் .எம் .சாள்ஸ் மற்றும் சர்வமத தலைவர்கள் , வங்கி முகாமையாளர்கள் ,
வங்கி உத்தியோகத்தர்கள் ,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்