அம்பாரை மாவட்டத்தின் போனஸ் ஆசனம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுமா??..

(சசி துறையூர்) 

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நடந்தேறியுள்ள நிலையில். 225 உறுப்பினர்களை கொண்ட இளைஞர் பாராளுமன்றத்திற்கு 160 உறுப்பினர்கள் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள இளைஞர்கள் என நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு போனஸ் ஆசனம் அம்பாரை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் போனஸ் ஆசனம் பெண் ஒருவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது என அறியமுடிகிறது.

ஏனெனில் அம்பாரை மாவட்டத்தில் மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் வாக்கெடுப்பு மூலம்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே போனஸ் ஆசன ஒதுக்கீடு விதிமுறையின் பிரகாரம் பெண் ஒருவருக்கே  வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 56% வாக்குப்பதிவின் மூலம் அம்பாரை மாவட்டம் வாக்களிப்பு வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.