சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான  தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு  15.12.2016  இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது
.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் யொவுன் புர தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உதவி பணிப்பாளர்  எ . நிஹசமத்துல்லா தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கானது  2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யொவுன் புர  நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின்  சிறு தொழில் முயற்சிகளுக்கான  ஊக்குவிப்பும் ,உற்பத்திகளை  சந்தைப்படுத்தல் அறிவை விருத்தி செய்யும் பயிற்சி வேலைத்திட்டமாகவும் வெற்றிகரமான வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாக்கும் பொருட்டு  , தொழில் , வர்த்தக அறிவு , சந்தைப்படுத்தல் திறமை ,ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை  இனங்காண்பது தொடர்பான பயிற்சிகள் இந்த கருத்தரங்கில் வழங்கப்பட்டது .


நடைபெற்ற இளைஞர் , யுவதிகளுக்கான சிறு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவி பணிப்பாளர் இசுறு உதான , மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்றுவிப்பாளர் எஸ் . வினோத் ,மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி . தாரணி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர் .