மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய அனர்த்த பாதுகாப்பு தின நிகழ்வு

(லியோன்)

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி ஆண்டு தோறும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த பிரதான நிகழ்வு இன்று காலை மட்;டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்தவர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி இதன்போது இடம்பெற்றதை தொடர்ந்து தேசிய அனர்த்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.