உணவங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகளை கையாளப்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(லியோன்)

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உணவங்களில்  பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள்  கையாளப்படும்  உணவக  உரிமையாளர்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ .லதாகரனின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  உள்ள அனைத்து சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும்  உள்ள உணவங்கள் 20.12.20016  செவ்வாய்கிழமை  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது .

இதன் போது உணவு ஒழுங்கு விதிகளுக்கு முரணான வகையில் உணவுகள் கையாளும் உணவங்களில்  உணவு சட்ட விதிகளுக்கு முரணான வகையில் பிளாஸ்டிக் பத்திரங்களில் உணவு பொருட்களை கையாளப்பட்டமை தொடர்பாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது


இந்த  சோதனை நடவடிக்கையின் போது உணவங்களில் உணவு பொருட்களை கையாளுவதற்காக உபயோகிக்கப்பட்ட அணைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ,இவ்வாறு பிளாஸ்டிக் பாத்திரங்கள் கைபற்றப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .