(லியோன் )
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் –இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் – தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது
இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள்
18.12.2016 ஞாயிற்றுக்கிழமை
நாடளாவிய ரீதியில் நடைபெற்றது
நடாளாவிய ரீதீயில் 235
உறுப்பினர்களை தெரிவு செய்ய 670 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்புகள் இடம்பெற்றன
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15996 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒருவரை தெரிவு செய்ய 14 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு
மட்டக்களப்பு தேர்தல்
தொகுதியில் 6185 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்
இதற்கு அமைய மண்முனை வடக்கு
பிரதேச செயலக பிரிவுக்கான வாக்களிப்புகள் மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள
வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்றது .
இதற்கு அமைய தேர்தல்
கடமையில் பிரதான கண்காணிப்பாளராக மண்முனை
வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா மற்றும் அவருடன்
இணைந்ததாக கண்காணிப்பு கடமையில் மண்முனை வடக்கு உதவி
பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , மண்முனை
வடக்கு பிரதேச செயலக கிராம சேவைகள் நிர்வாக தலைவர்
எஸ் . தில்லைநாதன் ,தேசிய இளைஞர்
சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம் .என் .எம் .நைரூஸ் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் சேவைகள்
மன்ற உத்தியோகத்தர் திருமதி .பிரசாந்தி பிரியதர்சன், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .