(லியோன்)
பாலியல் சம்பவம்
ஒன்றின் ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மண்முனை வடக்கு
பிரதேச செயலகத்தில் 23.12.2016
வெள்ளிக்கிழமை நடைபெற்றது
.
கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜாவின் வழிகாட்டலின் கீழ் மண்முனை வடக்கு
பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . சந்திரவாணி மனோகரன்
தலைமையில் பாலியல் சம்பவம்
ஒன்றின் போதான ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மண்முனை
வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
தற்போது அதிகரித்து
வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , பாலியல் துஸ்பிரயோகம் , குடும்ப வன்முறைகள்
, சிறுவர் துஸ்பிரயோகங்கள் , இளம்வயது திருமணம் ,போன்ற சமூக சட்ட விரோத செயல்பாடுகளை எவ்வாறு தடுத்தல்
, குறித்த சம்பவங்களுக்கான ஆதாரங்கள்
மற்றும் தகவல்களை எவ்வாறு பெற்றுகொள்ளல் .பெற்றுக்கொண்ட ஆதாரங்கள் மற்றும்
தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு
விடயங்கள் இந்த பயிற்சி கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது ..
இந்த பயிற்சி கலந்துரையாடலில்
கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி
ஒன்றியத்தின் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு பிரதேச
செயலக பிரிவுக்குற்பட்ட கிராமமட்ட பெண்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,
பெண்கள் ,சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்