பெரியகல்லாறில் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின்ஏற்பாட்டில் பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக சுனாமி அனர்த்த நினைவுதின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலயங்களின் தலைவர்கள்,கிராம சேவையாளர்கள்,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு இரண்டு நிமிடங்கள் ஆத்மசாந்தி மௌன பிரார்த்தனை நடாத்தப்பட்டது.