மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய நடமாடும் சேவை

 (லியோன்)

இலங்கை  பொலிஸ்  திணைக்களத்தின்  150வதுவருட  நிறைவினை         சிறப்பிக்கும்  வகையில்இலங்கை  பொலிஸ்மா  அதிபரின்  சிந்தனைக்கு அமைவாக   நாடளாவிய  ரீதியில்  விசேட   சமூக சேவை   நடமாடும் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன


இதற்கு அமைய மட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை 18.12.2016  ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில்   மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி எம் .எம் .ஜி .டி. தீ காஹா வதுற  தலைமையில்   இடம்பெற்றது .  

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ,திராய்மடு , பனிச்சையடி , நாவலடி , ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களின் நலன் கருதி   இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது

இந்த  நடமாடும் சேவையில் மக்களுடைய பொலிஸ் சம்பந்த பட்ட முறைபாடுகள் , சிறுவர் மகளீர் தொடர்பான முறைபாடுகள் , கிராம மட்டத்தில் கிராம சேவையாளர்களின் ஆவன பதிவுகளான ,கடவுச்சீட்டு ,தேசிய அடையாள அட்டை , காணி தொடர்பான ஆவன விபரங்கள்மோட்டார் வாகன தொடர்பான முறைபாடுகள் , நோய் தொடர்பான ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகள் அதற்கான மருந்து விநியோகம் போன்ற சேவைகளும் அத்தோடு  பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் ,  உலர்வுணவு பொருட்கள் , மரக்கன்றுகள்  போன்றவை வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி    தலைமையில் எம் .எம் .ஜி .டி. தீ காஹா வதுற நடைபெற்ற  இந்த  நிகழ்வில் மட்டக்களப்பு  அம்பாறை பிரதி பொலிஸ்மா  அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொட ,            மட்டக்களப்பு  களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ்  அத்தியட்சகர்   சிசிர பெத்த தமந்திரி   சிவில்  பாதுகாப்புக்குழு தலைவர்  ஸ்டீபன் ராஜன் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,மத  தலைவர்கள் . ஆயுர்வேத வைத்தியர்கள் பொலிஸ்  உத்தியோகத்தர்கள் ,  சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ,  கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள்  பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .