2016ஆம் ஆண்டுக்கான மாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   மாவட்ட செயலக 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் 2016ஆம் ஆண்டுக்கான   வருடாந்த ஒளிவிழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் .சாள்ஸ் தலைமையில்  20 .12.2016  செவ்வாய்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்களும்  மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின்   ஒளிவிழா கலை நிகழ்வுகள்  இடம்பெற்றது.   

இதனை தொடர்ந்து ஒளிவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்ட அதிதிகளினால் மாணவ சிறார்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் அதிதிகளாக  மட்டக்களப்பு மறைக்கோட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய போதகர்  எ .கிரேஸ் ரொபின் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ் .ரங்கநாதன் , மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா ஆகியோர் கலந்துகொண்டனர் .

மற்றும் குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் , பாடசாலை மாணவ சிறார்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .