மட்டக்களப்பில் அன்னை சாரதாதேவியின் 164வது ஜனனதின நிகழ்வுகள்

அன்னை சாரதாதேவியின் 164வது ஜனனதின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ணமிசனில் இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.

நேற்று முதல் அன்னை சாரதாதேவியின் நிகழ்வுகள் நடைபெற்றுவருவதுடன் நேற்று மாலை அன்னையின் ரத ஊர்வலம் நடைபெற்றது.

அன்னையின் திருவுருவம் தாங்கிய ரததத்திற்கு பூஜைகள் நடைபெற்று இரத பவனி நடைபெற்றதுடன் பக்தர்கள் பலர் கலந்துகொண்டதுடன் பஜனைகளும் இசைக்கப்பட்டத.

இன்று காலை விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.